தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் முன்பும் 2ம் கேட் பகுதிகளிலும் நடைபெற்று வரும் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாநகரின் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள் மற்றும் நீரோட்ட தடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் போது, பகுதிச் செயலாளர் மற்றும் மாநகர மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் உடனிருந்தார்.

மழைக்காலத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் சாலைகள், வடிகால்கள், கழிவுநீர் கால்வாய்கள் உள்ளிட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மழைநீர் தேங்கல் பிரச்சனை இல்லாமல் பொதுமக்கள் நலன் கருத்தில் கொண்டு பணிகளை விரைவாக நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி அறிவுறுத்தினார்.