பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ இன்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அவரை வரவேற்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.எஸ். ரமேஷ், திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயக ரமேஷ் ஆகியோர் தலைமையில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பல மதிமுக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து பெரும்பான்மை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விமான நிலையத்திற்கு திரண்டு வந்து துரை வைகோவுக்கு மலர் மாலைகள் அணிவித்து ஆர்ப்பாட்ட குரலில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அவர் மாவட்ட நிர்வாகிகளுடன் பல்வேறு மக்கள் நல கோரிக்கைகள் மற்றும் கட்சித் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு — மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வருகை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு!!
அடுத்த
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிய துரை வைகோ — மனிதநேயத்தின் அருமையான வெளிப்பாடு!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026