செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் தொகுதியின் அனகாபுத்தூர் பகுதியில் 4-வது வட்டக் கழகம் சார்பில் மாபெரும் தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கழக பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி திமுக அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துரைக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த கூட்டம், வட்ட கழகச் செயலாளர் வினோத் கிருஷ்ணன் தலைமையிலும், பகுதி கழகச் செயலாளர் வேலாயுதம் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் உரையாற்றி திமுக அரசின் பொய்யான வாக்குறுதிகள் மற்றும் தோல்விகளை கடுமையாக சாடினார். அவரது அதிரடி உரையால் கூட்டம் உற்சாகக் களமாக மாறியது.

மேலும், மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லப்பாக்கம் ச.இராஜேந்திரன், தலைமைக் கழகப் பேச்சாளர் சிட்கோ சீனு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அனகாபுத்தூர் அன்னை மேரி தெருவில் நடைபெற்ற இந்த தெருமுனை பொதுக்கூட்டத்தில் ஏராளமான கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் பங்கேற்று தலைவர்களின் உரைகளுக்கு உற்சாகக் கைத்தட்டலால் ஆதரவு தெரிவித்தனர்.