தூத்துக்குடி மாநகராட்சியும் வீ கேன் தொண்டு நிறுவனமும் இணைந்து ரோச் பூங்கா கடற்கரையில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணி மற்றும் கூட்டு தூய்மைப்படுத்தும் பணி ஆகியவற்றை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சி மூலம் கடற்கரையை பாதுகாக்கும் புதிய முயற்சிக்கு துவக்கம் வைக்கப்பட்டது. பசுமையை வளர்ப்பதுடன், கடற்கரையை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டியது பொதுமக்களின் பொறுப்பு என மேயர் வலியுறுத்தினார். மேலும், மக்கள் கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கடற்கரையில் எறிவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளர் மற்றும் மண்டல தலைவர் தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின் ஆகியோர் பங்கேற்றனர்.

மாணவ–மாணவியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உற்சாகமாக கலந்து கொண்ட இந்த முயற்சி, தூத்துக்குடி கடற்கரைக்கு பசுமை போர்வை போர்த்தும் வரலாற்றுச் செயலாகப் பதிவாகியுள்ளது.