தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் செப்டம்பர் 21, 2025 (ஞாயிற்றுக்கிழமை) இன்று இலவச கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த முகாம், என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் – தூத்துக்குடி, தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி சமுதாய மேம்பாட்டுத் திடம், உன்னத் பாரத் அபியான் அமைப்பு சார்பாக இரண்டாம் ஆண்டு இளங்கலை உளவியல் துறை மாணவியர் மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

முள்ளக்காடு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற்ற இந்த முகாமை, என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி K. அனந்த ராமனுஜம் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெஸி அவர்கள் இணைந்து துவக்கி வைத்தார்கள்.

முகாமில் கண்பார்வை குறைபாடுகள், கண்ணழுத்த நோய், மூப்புக் கண்படல நோய் உள்ளிட்ட பல்வேறு கண் நோய்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தேவையுடைய நோயாளிகளுக்கு இலவசமாக கண் கண்ணாடி, அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், கண் பராமரிப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வும் மருத்துவர்களால் அளிக்கப்பட்டது.

சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த முகாமில் பயன்பெற்றனர்.