“நம் பயணம் நீண்டது… தமிழ்நாட்டைத் தலைகுனிய விடாமல் இலக்கை நோக்கி விரைவோம்” என்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிதம்பர நகர் பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கீதா ஜீவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் லயன் M. மருதப்பெருமாள், M.Com கலந்து கொண்டது சிறப்பு அம்சமாக அமைந்தது.

நிகழ்ச்சியில் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற தீர்மானம் வலியுறுத்தப்பட்டு, ஒருமித்த மனதுடன் உறுதி மொழி ஏற்கப்பட்டது.