தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியிலுள்ள முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனுடன், லயன்ஸ் டவுன் பகுதியில் இருந்து உப்பாற்று ஓடை வரை மழைநீர் சீராக வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வடிகாலின் வழியாக நீர் பாய்வதையும் பரிசோதனை செய்தார்.
மழையால் நகரில் நீர் தேக்கம் ஏற்படாதவாறு மாநகராட்சி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேயர் தெரிவித்தார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் முழு திறனுடன் நடைபெறுவதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
திரேஸ்புரம் முதல் உப்பாற்று வரை – மழைநீர் வெளியேற்றம் கண்காணித்த மேயர் ஜெகன் பெரியசாமி!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் நிலங்கள் – நேரில் ஆய்வு செய்த ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா!!
அடுத்த
“புகார் சொன்னால் உடனடி தீர்வு — தூத்துக்குடி மாநகரில் மேயர் ஜெகன் உறுதி!”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026