தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியிலுள்ள முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனுடன், லயன்ஸ் டவுன் பகுதியில் இருந்து உப்பாற்று ஓடை வரை மழைநீர் சீராக வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வடிகாலின் வழியாக நீர் பாய்வதையும் பரிசோதனை செய்தார்.

மழையால் நகரில் நீர் தேக்கம் ஏற்படாதவாறு மாநகராட்சி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேயர் தெரிவித்தார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் முழு திறனுடன் நடைபெறுவதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி ஆகியோர் கலந்து கொண்டனர்.