ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் பக்கபட்டி மற்றும் சென்னல்பட்டி கிராமங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் விவசாய நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கின. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன.
இந்த நிலையில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அவர்கள் வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்தார். தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களின் சேதத்தை அதிகாரிகளிடம் காண்பித்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகை விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த ஆய்வில் வேளாண்மை துறை இணை இயக்குனர் பெரியசாமி, உதவி இயக்குனர் ஏஞ்சலின், உதவி வேளாண்மை அலுவலர் செல்வசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகராஜா நயினார், ஜான்சிராணி, வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், கருங்குளம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் முருகன், அயலக அணி சஞ்சய், ஊராட்சி செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ சண்முகையா தெரிவித்தார்.
தூத்துக்குடி
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் நிலங்கள் – நேரில் ஆய்வு செய்த ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் கிழக்கு மண்டல அலுவலக முகாம் – மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு!!
அடுத்த
திரேஸ்புரம் முதல் உப்பாற்று வரை – மழைநீர் வெளியேற்றம் கண்காணித்த மேயர் ஜெகன் பெரியசாமி!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026