தூத்துக்குடி மாவட்டம் அய்யனடைப்பு கிராமத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மரம் நடும் பசுமை விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை வகித்தார். திட்ட இயக்குநர் ஐஸ்வர்யா, வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அய்யனடைப்பு கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 56 மரக்கன்றுகள் நடப்பட்டன. பசுமை வளர்ச்சியின் அவசியம் குறித்து விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழாவில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராம உதயம் கிளை அலுவலகம் ஆழ்வார்தோப்பு தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன், வனச்சரகர் பாபு, வன அலுவலர் ஜெயக்குமார், அய்யனடைப்பு கிராம உதவியாளர் சீனிவாசன், பசுமை தோழர் சந்தன சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
இந்த பசுமை விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட வனத்துறை, கோத்தாரி இன்டஸ்ட்ரியல், எக்னோரா நிறுவனம் மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனங்கள் இணைந்து செய்திருந்தன.
தூத்துக்குடி
அய்யனடைப்பில் பசுமை விழா: 56 மரக்கன்றுகள் நடவு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாநகராட்சி வாகன காப்பகத்தில் இருசக்கர வாகனம் திருட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் வாகன உரிமையாளர்கள் அச்சம்!!
அடுத்த
முதலமைச்சரின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சி மனுக்கள் மீது தீர்வு – பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026