தூத்துக்குடி சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் 31 வது தமிழ்நாடு பிரீமியர் லீக் அளவிலான கராத்தே போட்டிகள் (31.08.2025) அன்று தூத்துக்குடி புனித மரியன்னை பள்ளியில் நடைபெற்றது.

இப்போட்டியில் கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளரும் தொழில்நுட்ப இயக்குனருமான டாக்டர் சுரேஷ் குமார் தலைமை நடுவராக செயல்பட்டார். இதில் தூத்துக்குடி ஹோலி கிராஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியைச் சேர்ந்த  மாணவர்கள் கட்டா மற்றும் சண்டை பிரிவில் பங்கேற்று 6 தங்கப்பதக்கமும் 9 வெள்ளி பதக்கமும் 12 வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை ஹோலி கிராஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் முதல்வர்  சகோதரி. ரோசாரியோ, பள்ளியின் ஆசிரியர்கள், தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.