சட்டம் சொல்வது என்ன என்பதை பார்க்கலாம் வாங்க....
சொத்துக்கான பெண்களின் போராட்டம் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. நீண்ட காலமாக, இந்திய சட்டத்தின் கீழ் பெண்களுக்கு சொத்துரிமை இல்லை. அந்த விதி 2005ல் திருத்தப்பட்டது. தந்தை இறந்தால் சொத்தில் யாருக்கு பங்கு கிடைக்கும் என்பது அனைவருக்கும் எழும் ஒரு பொதுவான கேள்வி ஆகும்.
சொத்து மகன் அல்லது மகளுக்கு கிடைக்குமா? மற்றும் மருமகன், மருமகளின் பங்கு என்ன? என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 2005 ம் ஆண்டின் திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி, மகள்கள் மகன்களைப் போலவே மூதாதையர் சொத்தில் சம உரிமைகளை அனுபவிக்க முடியும்.
ஒரு தந்தை தனது விருப்பப்படி யாருக்கும் சொத்தை வழங்கலாம். ஆனால், அவர் தனது மகளின் பங்கைப் பறிக்க முடியாது. சொத்துக்கான பெண்களின் போராட்டம் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. நீண்ட காலமாக, இந்திய சட்டத்தின் கீழ் பெண்களுக்கு சொத்துரிமை இல்லை. அந்த விதி 2005ல் திருத்தப்பட்டது. அதேபோல், மருமகனுக்கு தனது மாமனாரின் சொத்தில் ஏதேனும் சட்டப்பூர்வ உரிமை உள்ளதா? என்ற கேள்வியும் அடிக்கடி எழுகிறது.
இதுப்பற்றி தற்போது பார்க்கலாம். ஒரு மருமகனுக்கு தனது மாமனாரின் சொத்தில் நேரடி சட்டப்பூர்வ உரிமை இல்லை. இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின்படி, மருமகனுக்கு தனது மாமனாரின் சொத்தில் எந்த சுயாதீன உரிமையும் இல்லை. இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 பரம்பரை உரிமையை நிர்வகிக்கிறது. இந்தச் சட்டம் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களுக்குப் பொருந்தும். சட்டத்தின்படி, ஒரு மருமகன் சட்டப்பூர்வ வாரிசுகளின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆகையால், அவர் தனது மாமனாரின் சொத்தில் நேரடியாகப் பங்கைக் கோர முடியாது.
இருப்பினும், ஒரு மனைவி தனது தந்தையிடமிருந்து சொத்தைப் பெற்றால், மருமகன் தனது மனைவி மூலம் அந்தச் சொத்தை மறைமுகமாக அணுகலாம்.
சட்டத்தின் பார்வையில்
வக்கீல் ரமேஷ்பாண்டியன்
9500580660 இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி
தந்தை உயில் எழுதாமல் இறந்தால் சொத்தில் யாருக்கு பங்கு? மகன், மகளுக்கு கிடைக்குமா? விளக்குகிறார் வக்கீல் ரமேஷ் பாண்டியன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஜெர்மனியில் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி வீரருக்கு உற்சாக வரவேற்பு!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் குறைதீர்க்கும் முகாம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026