தூத்துக்குடியில், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

ஐஎன்டியூசி மாநில தலைவர்  ஜெகநாதன் தலைமை வகித்தார். இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அமைப்பு செயலாளர் பி. கதிர்வேல் முன்னிலை வைத்தார். மாவட்டத் தலைவர்  ராஜகோபால் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மாநில செயலாளர்கள் ஆகிய  அருள் பிரசாத், முரளிதரன் காளான், பெருமாள்ச்சாமி கதிர்வேல், பிரவீன் மற்றும் இந்திய தேசிய தொழிற்சங்க சங்க காங்கிரஸ் நிர்வாகிகள்  சேகர், பால்ராஜ், அசோகன்,  மைக்கேல், வீரய்யா,  சண்முகையா, சர்தார்,  ராம்குமார், முத்து மற்றும் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் நிர்வாகிகள் தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், வருங்காலங்களில் விளிம்பு நிலை உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை எப்படி தொழிற்சங்கங்களின் மூலம் காப்பாற்றுவது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நிறைவாக ஐஎன்டியூசி கருப்பசாமி  நன்றி கூறினார்.