“கலைகள் யாவும் மக்கள் அனைவருக்கும்; கலை வழி மனித நேயம் காப்போம்” என்ற உயரிய சிந்தனையுடன், தூத்துக்குடி கண்ணா சில்க்ஸ் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கண்ணா சில்க்ஸ் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்த சூழல் உருவாக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சகா கலைக்குழு கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

சகா கலைக்குழு சார்பில் கட்டைக்கால் ஆட்டம், பறையாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் அரங்கேறி, கண்ணா சில்க்ஸ்க்கு வந்த வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தின. பாரம்பரிய கலைகளின் துடிப்பான வெளிப்பாடு அனைவரையும் கவர்ந்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கண்ணா சில்க்ஸ் நிர்வாகம் சார்பில் கடைக்கு வரும் அனைவருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், பண்டிகை கால சிறப்பு விற்பனை மூலம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான ஷாப்பிங் அனுபவம் வழங்கப்பட்டது.

கலைக்கும் மனிதநேயத்திற்கும் முக்கியத்துவம் அளித்து, பண்டிகையை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியாக கொண்டாடிய கண்ணா சில்க்ஸ் மற்றும் சகா கலைக்குழுவின் இந்த முயற்சி அனைவரின் பாராட்டையும் பெற்றது.

– கலையும் கல்வியும்
டாக்டர். சகா
தொடர்பு: 99446 62279