இம்மானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.

அவருடைய நினைவு தினம் செப்டம்பர் 11 ம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அவருடைய தியாகத்தை நினைவு கூர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் சேகரனாரின் தியாகத்தை நினைவு கூர்ந்து, புகழ் வணக்கம் செய்து வீரவணக்கம் மரியாதை செய்தார்.