தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தாகுளம் பள்ளியில் நடைபெற்று வரும் சுகாதார வளாகப் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இப்பள்ளியில் மாணவர்களின் அதிக எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், பள்ளி வளாகத்தில் உள்ள நூலகத்திற்கு தொடர்ந்து வரும் வாசகர்களின் தேவையையும் கருத்தில் கொண்டு, கூடுதலாக சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகள் துரிதமாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என மேயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, தலைமை ஆசிரியர் எமல்டா வெலன்சியா ஹெசியா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.