தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தாகுளம் பகுதியில் முதல்வர் படைப்பகத்திற்கான பணிகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில், அந்த இடத்தினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா., வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் உள்ளிட்டோர் உடன் கலந்துகொண்டனர்.

மக்களின் கல்வி, கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் மேம்பாட்டிற்காக உருவாக்கப்படவுள்ள முதல்வர் படைப்பகம், இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் பலன்களை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.