தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களைப் போல் மழைக்காலத்தில் மாநகரப் பகுதிகளில் நீர் தேங்காமல் இருக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக புறநகர் பகுதியில் இருந்து மாநகர எல்லைக்குள் மழை நீர் வருகின்ற வழித்தடமான இந்திய உணவுக் கழகத்தின் முன்பு உள்ள ஓடையில் நடைபெற்று வரும் அகலப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு மேயர் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.