தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் செயின்ட் மேரிஸ் கல்லூரி மாணவியர்கள் இணைந்து இனிகோ நகர் கடற்கரையில் கூட்டு தூய்மைப் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

இந்த முயற்சி, மக்களிடையே கடல் மற்றும் கடற்கரை சுத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்பான வாய்ப்பாக அமைகிறது.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப., வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், கல்லூரி பேராசிரியர்கள், மாணவியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.