வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் எவ்வாறு முன்னேறி வருகின்றன என்பதை நேரடியாக பார்வையிட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி ஆகியோர் இணைந்து ஆய்வில் பங்கேற்றனர்.
மழைநீர் வெளியேற்றும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வரும் நிலையில், மேயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வேகமாகவும் முழுமையாகவும் நீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எட்டையாபுரம் ஹவுசிங் போர்டு, டி மார்ட் எதிர்புறம், ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேற்றம் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
மழைநீரை விரைவாக வெளியேற்ற அதிரடியாக களத்தில் இறங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி – எட்டையாபுரம் ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழை பாதித்த மக்களுக்கு நிம்மதி – அதிவேக நடவடிக்கையில் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
அடுத்த
“பத்திரிகையாளர்கள் பேனாவை விட்டு போராட்ட மைதானத்துக்கு!”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026