வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேமிப்பு மற்றும் நீர்வரத்து நிலையை மதிப்பீடு செய்வதற்காக சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது ஒட்டநத்தம் பொதுப்பணித்துறை குளம் மற்றும் முறம்பன் தர்மத்தாய் குளத்தில் நீர்மட்டம், கரைகளின் நிலை, நீர்வரத்தின் ஓட்டம் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. மழைக்காலங்களில் குளங்களின் கரைகள் சேதமடையாமல் பாதுகாக்கவும், நீர்வரத்தின் அளவை தொடர்ந்து கண்காணிக்குமாறு அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது கிராம நிர்வாக அலுவலர்கள் கதிர்வேல், அழகுமலை, ஊராட்சி செயலர் முத்துலட்சுமி, கிளை செயலாளர்கள் ஜான், சேதுராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுடலைமணி மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.