தூத்துக்குடி மாநகரம் 39வது வார்டுக்கு உட்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகள் குறித்த விவரங்களை மாநகராட்சி பொறியாளர்களிடமிருந்து அமைச்சர் கேட்டறிந்தார். சாலைத் தரம், வடிகால் அமைப்பு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான வசதிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அமைச்சருடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சோமு, வட்டக் கழக நிர்வாகி மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களின் போக்குவரத்துக்கும் வசதிக்கும் இந்தப் புதிய பேவர் பிளாக் சாலை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் சாலைப் பணிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர் கீதாஜீவன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வீரமாமுனிவர் பிறந்தநாள் விழாவில் காமநாயக்கன்பட்டியில் மரியாதை!!
அடுத்த
பொதுமக்களுக்கு இடையூறு என்றால் கடைகள் தேவையில்லை – அண்ணா பேருந்து நிலையத்தில் அதிரடி நடவடிக்கை!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026