உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பிய புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டியனை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக் குழு தலைவரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான G.V. மார்கண்டேயன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த சந்திப்பின்போது, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், வார்டு உறுப்பினர் தினகரன், புதூர் கிழக்கு ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் வாசுதேவன், புதூர் மத்திய ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மோகன் தாஸ், இளைஞர் அணி சதீஷ்குமார், புதூர் பேரூர் கழக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மருதுபாண்டியனின் உடல்நலம் குறித்து விசாரித்த மார்கண்டேயன், விரைவில் முழுமையான நலம் பெற வாழ்த்துகளை தெரிவித்தார்.