தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி  ஊராட்சி பூப்பாண்டியாபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.12.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக்கடையை
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
 
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹைகோர்ட் மகாராஜா பானு கூட்டுறவு சார்பதிவாளர் அந்தோணி பட்டுராஜ் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் TTC. ராஜேந்திரன் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன் இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின் மாணவரணி தங்கமாரி முத்து
வர்த்தக அணி பிலோமின்ராஜ் தகவல் தொழில் நுட்ப அணி சின்னதுரை ஒன்றிய கழக நிர்வாகிகள் கணேசன் நெல்சன் ராஜேந்திரன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர் கிளை கழக நிர்வாகிகள் கதிர்வேல் பூசாரி முருகன் மு.க. முருகன் துரை இம்மானுவேல் பாரதிராஜா மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.