தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அதிவேக இணைய வசதி, கணினி மற்றும் தேவையான மின்னணு உபகரணங்கள் இல்லாத நிலையிலும், வரும் 1ஆம் தேதி முதல் இ-பைலிங் நடைமுறையை கட்டாயப்படுத்தும் முயற்சியை கடுமையாக எதிர்த்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றப் பணிகளை முழுமையாக புறக்கணித்தனர்.
நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு, நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் தலைமையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இ-பைலிங் நடைமுறைப்படுத்த தேவையான அடிப்படைத் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத நிலையில் இதனை கட்டாயப்படுத்துவது நடைமுறைக்கு புறம்பானது, வழக்குரிமை பாதிக்கப்படக்கூடியது என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இன்றைய போராட்டத்தால் நாகர்கோவில் நீதிமன்றங்களின் வழக்குப் பணிகள் முழுமையாக முடங்கியிருந்தன. போராட்டம் குறித்து வழக்கறிஞர்கள் தொடர்ந்து கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி
இ-பைலிங் கட்டாயத்திற்கு எதிர்ப்பு – நாகர்கோவில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்; நீதிமன்றப் பணிகள் முடக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பு செய்த நிறுவனத் தலைவர் சகிலன்!!
அடுத்த
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ தொடக்கி வைத்த திசையன்விளை–இராமேஸ்வரம் புதிய அரசு பேருந்து சேவை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026