திருநெல்வேலி பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர், தமிழ் செல்வி தம்பதியரின் மகன் மென் பொறியாளர் கவின் செல்வ கணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது இல்லத்திற்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அப்போது பேசுகையில் அந்த இளைஞரை பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவர் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர்களான பெண்ணின் பெற்றோர் மீதும் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் மட்டும் பாய்ந்துள்ளது. ஆனால், அவர்கள் கைது செய்யப்படவில்லை, அவர்களையும் கைது செய்ய வேண்டும். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அதோடு இவர்கள் யார் என்ற முகம் வெளி உலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

ஆணவப் படுகொலைக்கு இதோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இனி இதுபோன்ற துயர சம்பவம் நடைபெற கூடாது என்று மக்கள் நல உரிமை வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து சிறப்பு சட்டம் இயற்றி அதன் படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணவப் படுகொலை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க முன்வர வேண்டும். என்று மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வலியுறுத்துவதாக தெரிவித்து கவின் செல்வ கணேஷ் பெற்றோருக்கு தனது ஆறுதலை தெரிவித்தார்.