தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் பெரிதும் அவதிய прежvoன்றனர். குறிப்பாக, ராஜீவ் நகர் வடக்கு 6-வது தெரு பகுதியில் மழைநீர் வீடுகளில் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மூத்த வழக்கறிஞரும் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் மாநில வழக்கறிஞர் அணி செயலாளருமான ஜெயபால், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்திற்கு மனு அளித்து, போர் கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
அவர் தனது மனுவில் குறிப்பிட்டதாவது “நான் வசிக்கும் ராஜீவ் நகர் வடக்கு 6-வது தெரு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லை. பாதாள சாக்கடை திட்டத்தின் பெயரில் தெருக்களை தோண்டி சரியாக மூடாததால் தெருக்கள் மேடு பள்ளமாகி மழைநீர் தேங்குகிறது. மாநகராட்சி சுகாதார அலுவலர் வசிக்கும் தெருவில் மட்டும் சரளாக போக்குவரத்துக்கு ஏற்றவாறு சாலை சீரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற வீடுகள் மழைநீரால் மூழ்கியுள்ளன. நாங்களும் மாநகராட்சிக்கு வரி செலுத்துகிறோம். பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மழைநீர் தேங்கி வீடுகள் பாதிக்கப்படுவதால் உடனடியாக போர் கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்றி, வடிகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி
மழைநீர் வீட்டுக்குள் புகுந்தது – ராஜீவ் நகர் வடக்கு மக்களின் அவதி! வழக்கறிஞர் ஜெயபால் மனு – “போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” கோரிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சடையனேரி கால்வாய் திறப்பில் பாஜகவின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு வெற்றி!!
அடுத்த
தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கம் டிரஸ்ட் சார்பில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026