தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகரில் மழை காரணமாக தேங்கியுள்ள நீரை விரைவாக அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மாநகரின் முக்கியமான சாலைகளில் ஒன்றான ஏவிஎம் மருத்துவமனை முன்பகுதியில் மழைநீர் தேங்கியிருந்ததை தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மழைநீர் வடிகால் குழாய்கள் வழியாக நீர் சீராக வெளியேறுகிறதா, பொதுமக்கள் நெரிசல் அல்லது சிரமம் இல்லாமல் போக்குவரத்து நடைபெறுகிறதா என்பதையும் அவர் ஆய்வு செய்தார். மேலும், சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மாநகராட்சி பொறுப்பாளர்கள், துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இணைந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் மாநகராட்சி தொடர்ந்து கண்காணிப்பு செய்து வருகிறது.