தூத்துக்குடி மாநகரில் பெய்துவரும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மடத்தூர் மற்றும் புறவழிச் சாலை அருகிலுள்ள பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளின் முன்னேற்றத்தை நேரில் பார்வையிட்டு, தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். பணிகள் நடைபெறும் இடங்களில் மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து பணிபுரிந்தனர்.
பொதுமக்களின் சிரமம் குறைய, துரித நடவடிக்கை எடுத்து மழைநீர் அகற்றும் பணிகளை விரைவாக முடிக்குமாறு மேயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மழை காரணமாக எந்த இடத்திலும் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாநகராட்சி முழு தயார்நிலையில் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
மழைநீர் அகற்றும் பணிகள் வேகமாக நடைபெறுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தீபாவளி பண்டிகையில் குழந்தைகள் பாதுகாப்பாக வெடிகள் வெடிக்க வேண்டும் – சகா கலைக்குழு முனைவர் சங்கர் வேண்டுகோள்!!
அடுத்த
மழைநீர் சிக்கல் தீர்க்க தூத்துக்குடி வந்தடைந்த அமைச்சர் கீதாஜீவன் — மழைநீர் தேங்கிய பகுதிகளில் துரித ஆய்வு!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026