மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான புரட்சி புயல் வைகோவின் 82வது பிறந்தநாள் விழா இன்று (22.09.2025) காலை தூத்துக்குடியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன.

இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், எம்எல்எப் தொழிற்சங்க நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

வைகோவின் அரசியல் பயணத்தை பாராட்டி, அவர் நீண்ட ஆயுள் பெற்று இனியும் மக்கள் நலனுக்காக பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.