இஸ்லாமியர்களின் புனித மாதமான ரபீஉல் அவ்வல் மாதத்தின் 12ஆம் நாள், நபிகள் நாயகம் ஹஸ்ரத் முகமது பிறந்த தினமாக நினைவுகூரப்படுகிறது. நபியின் போதனைகளை பின்பற்றவும், வாழ்க்கையைப் போற்றவும், இந்நாள் உலகம் முழுவதும் முஸ்லிம் சமூகத்தினரால் மீலாது நபி விழாவாக கொண்டாடப்படுகிறது.

அதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமா சபை மற்றும் முத்தையாபுரம் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் சார்பில் மக்தப் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமா சபை தலைவர் இம்தாதுல்லாஹ், மாவட்ட தலைவர் ஷேக் முஹம்மது, செயலாளர் சம்சுதீன், முத்தையாபுரம் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் செய்யது மரைக்காயர், செயலாளர் முஹம்மது, பொருளாளர் அப்துல் மஜித், துணை செயலாளர் சம்சுகனி, நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்யது சிராஜுதீன், அப்பாஸ், கமால்தீன், சிக்கந்தர், சம்ஜத் உசேன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் நிர்வாகிகள், சமூகத்தினர், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.