தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது சங்கத்தின் மாநில தலைவர் நம்பராஜன் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, சாத்தான்குளம் ஆகிய மூன்று இடங்களில் வித்யா பிரகாசம் சிறப்புப் பள்ளியானது 2003 ஆம் வறுமை நிலையில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நலன் கருதி தொடங்கப்பட்டது. பின்னர் மாணவர் குறைவை காரணம் காட்டி 2017 ம் ஆண்டு மூடப்பட்டது. மேலும் பள்ளிப் பேருந்தும் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, பள்ளியானது 2019 மார்ச் மாதம் ஆட்டிசம் குழந்தைகளுக்காக ஆரம்ப கால பயிற்சி மையம் ஆரம்பிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்ம நாயகம் மற்றும் ஸ்பீச் தெரபிஸ்ட் ராஜேஸ்வரி அவர்களால் திரும்பவும் 2023 டிசம்பர் அன்று திரும்பவும் மூடப்பட்டது. இந்த நிலையில், அரசு பணியாளரான ஸ்பீச் தெரபிஸ்ட் ராஜேஸ்வரி SNOWS என்ற பெயரில் சொந்தமாக தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் Snows Creche மையத்தையும் நடத்தி வரும் நிலையில், இவரின் தொழில் பாதிக்கப்படுவதால் இலவசமான சேவை வழங்குகின்ற வித்யா பிரகாசம் சிறப்புப் பள்ளியை மூட முயற்சி செய்கிறார்.

கோவில்பட்டி வித்யா பிரகாசம் பள்ளி சிறப்பு ஆசிரியர் பிரியங்கா கடந்த மூன்று வருடங்களாக மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். அதுமட்டுமின்றி, 2018 ம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி அவர்களால் வழங்கப்பட்டு வந்த சில சலுகைகள் 2024 ம் ஆண்டு அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்போதைய ஆட்சியர் இளம் பகவத் பள்ளி தலைவராக பொறுப்பேற்ற முதல் 2018 முதல் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பயணப்படி ரூபாய் 3000 நிறுத்தப்பட்டது. மேலும், தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்த ஆயா மற்றும் உதவியாளர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியமும் குறைக்கப்பட்டு பணியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் வரை ஊதியம் வழங்கப்படவில்லை.

ஆகவே, தற்போதைய ஆட்சியர் வந்ததிலிருந்து இந்த ஊழல் அதிகாரிகளின் பேச்சைக்கேட்டு நிறுத்தப்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி வாகனத்தை மீண்டும் இயக்க வேண்டும், பணியிலிருந்து நிறுத்தப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், ஆசிரியர்களுக்கு தற்போதைய ஆட்சியாளரால் குறைக்கப்ட்ட ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், மேலும் இது சம்பந்தமாக தமிழக முதல்வருக்கும் மனு அளித்துள்ளோம். பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டங்களையும் நடத்த போவதாக செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.