28.09.25 அன்று காலை, அழகப்பா கல்வி நிலையம் மாடியில் தூத்துக்குடியில் உள்ள புத்தக வாசிப்பு நற்பணி மன்றத்தின் புத்தகப் பார்வை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில், எழுத்தாளர் ரமேஷ் அறிவழகன் எழுதிய கிராமத்தின் எழுதுகோல் சிறுகதைத் தொகுப்பு மற்றும் எழுத்தாளர் கொற்கை அ. ஜூடின் எழுதிய காலப்பனை கவிதைத் தொகுப்பு புத்தகங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
கல்லூரி மாணவிகள் அ. முத்து மதுமாதி, ம. மகாலெட்சுமி சிறுகதைத் தொகுப்பு குறித்தும், சான்ட்ரா மேக்ஸ் லின் மற்றும் மரிய ரேச்சல் கவிதைத் தொகுப்பு குறித்தும் தத்தமது வாசக அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர். இதன் மூலம் கலந்துகொண்ட பார்வையாளர்கள் புதுமையான வாசிப்பு அனுபவத்தை பெற்றனர்.
எழுத்தாளர் ரமேஷ் அறிவழகன் தனது எளிய மொழியில் மனநிறைவான ஏற்புரை வழங்கினார். கவுன்சிலர் அந்தோணி தனுஸ் பாலன் தலைமையிலே நிகழ்வு நடாத்தப்பட்டது. கருவூலத்துறை பணிநிறைவு செய்யது முகம்மது ஷரீப், வழக்கறிஞர் ஐ.பி. பாலசேகர் மற்றும் முனைவர் அ. அற்தோணி இரவீந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்வில் புத்தக வாசிப்பு ஆர்வலர்கள் லாரன்ஸ், மரியசந்திரக்குமார், ரமேஷ், ஹரிபிரசாத், காதைக்களம் அன்புக்குமார், அபிநய செல்லா, சுகன்யா, யுவராணி, பட்டிமன்ற பேச்சாளர் நா. மாணிக்கவாசகம், பன்முக கலைஞர் பத்மநாதன் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து சிறப்பு செய்தனர்.
மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் குமிழ்முனை புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டு, குமிழ்முனை சைமன் அறிமுகவுரை வழங்கி நிகழ்வை தொகுத்து நடத்தியார். கலையின் குரல் ப. சக்திவேல் மற்றும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றத்தின் பொறுப்பாளர்கள் ஆ. மாரிமுத்து, ஸ்பிக் செல்வின் மற்றும் செய்தியாளர் ரவி நிகழ்வை சிறப்புற ஏற்பாடு செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் புத்தக வாசிப்பு நற்பணி மன்றத்தின் சிறப்பு புத்தகப் பார்வை நிகழ்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மட்டக்கடை பகுதியில் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடியில் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026