தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில், பேரூர் ஊராட்சி புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் விமர்சையாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான மாண்புமிகு கீதாஜீவன் தலைமையேற்றார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன் வரவேற்புரையாற்றினார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், “திமுக உருவாக்கப்பட்டதிலிருந்து பல தடைகளை தாண்டி தமிழ்நாட்டின் அரசியலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. கலைஞர் ஐந்து முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று தமிழக முன்னேற்றத்திற்கும், தேசிய அளவிலான அரசியலிலும் தனித்த அடையாளத்தை பதித்தார். இன்று அவரது கொள்கைகளைப் பின்பற்றி, திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் ஆட்சி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இங்கு இருக்கும் ஒவ்வொரு மாணவரும் திமுக செய்துள்ள சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஒவ்வொருவரும் குறைந்தது 50 வாக்குகளை திமுகவிற்காக திரட்டும் பணியை உடனே தொடங்க வேண்டும்.
2026 சட்டமன்றத் தேர்தலில், தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதிகளில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் உழைக்க வேண்டும். மாணவரணி தான் திமுகவின் வெற்றிக்கு முதுகெலும்பு.
புதிய வாக்காளர் பட்டியலில் 18 வயது நிறைவு பெற்ற இளைஞர்களைச் சேர்க்கும் பணியில் மாணவர்கள் தீவிரம் காட்ட வேண்டும். இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள்; தங்களின் ஒற்றுமையும் அர்ப்பணிப்பும் திமுகவை 7வது முறையாக ஆட்சியில் அமரச் செய்யும்,” என்று உறுதியுடன் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் கோகுல்நாத், ஆகாஸ்பாண்டியன், கனகவா, பிரதீபா, மாநகர மாணவரணி துணை அமைப்பாளர்கள் சத்யா, கார்த்தி, மாநகர அணி நிர்வாகிகள் ரவி, மணி அல்பட், பேரூர் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாநகர மாணவரணி அமைப்பாளர் டைகர் வினோத் நன்றியுரை வழங்கினார்.
தூத்துக்குடி
திமுக வெற்றிக்கு மாணவரணி தான் முதுகெலும்பு – அமைச்சர் கீதாஜீவன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
செங்கல்பட்டு மாவட்ட அளவிலான 2025-26 கல்வியாண்டுக்கான வினாடி வினா மன்றப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது!!
அடுத்த
“உயிர் காக்கும் வேகத்தடைகள் மீண்டும் வேண்டும்!” – புதுக்கோட்டை மக்களுக்காக கோசல்ராம் ராஜா குரல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026