திரை உலகின் முதல்வர், அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் அவரது ரசிகர்கள் மனிதநேயமும் ஆன்மீகமும் கலந்த சிறப்பான விழாவை இன்று நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்ட தங்க மகன் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் அரசு மருத்துவமனையில் பிறந்த அனைத்து புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கும் பரிசுப்பொருட்கள், புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டு மகிழ்ச்சி பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இத்துடன், சிவன் கோவில், மசூதி, மாதா கோவில் உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மாவட்ட ரசிகர் மன்ற பொறுப்பாளர்களான துரைராஜ், வேல்முருகன், சூர்யா மற்றும் சட்ட ஆலோசகர்கள் ரமேஷ் பாண்டியன், அருணா தேவி, தனம் பூங்கொடி, டிட்டோ சந்துரு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ரஜினி பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.