தூத்துக்குடி போல்டன் புரத்தில் சமூகநீதி போராளி தமிழர் தியாகி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி ஆலோசனையின்படி மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் எஸ்.டி. வினிஸ்டன் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.

இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட செயலாளர் ரஜிஷ், இளைஞர் பாசறை நிர்வாகிகள் ரவி, ஓம் பிரகாஷ், உதயா, முத்துராஜ் ஆகியோர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வீர அஞ்சலி செலுத்தினர்.