தூத்துக்குடி முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 35 வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. பள்ளி மாணவ மாணவிகள் நான்கு வண்ணப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைப்பெற்றது. அவற்றில் நீல நிற பிரிவு மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர்.
    
விழாவிற்க்கு முத்தையாபுரம் ஏ.வி.எஸ். ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர் ஜேசுதாஸ் தலைமை தாங்கி  விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக பள்ளி செயலர் ஜீவன்ஜேக்கப் வரவேற்புரையாற்றினார். பள்ளி முதல்வர் சித்ரா நன்றியுரையாற்றினாா்.