தூத்துக்குடி மாநகராட்சி 50 வார்டு பகுதிக்கு உட்பட்ட கணேசன் காலனி 3 வது தெரு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மின் கம்பி ஒன்று அருந்து விழுந்த நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கணேசன் காலனி 3 வது தெருவில் உள்ள மின்கம்பத்தில் உள்ள மின் கம்பி ஒன்று அருந்து கிடைப்பதாகவும், அதனால் விபத்துகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதை அறிந்து அந்த பகுதி மக்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் அவர்களுக்கு தொலைபேசி வழியாக தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த சில நிமிடங்களில் கவுன்சிலர் சரவணகுமார் உரிய இடத்திற்கு விரைந்து சேதமடைந்த நிலையில் காணப்படும் மின் கம்பங்களை பார்வையிட்டு இரவு நேரங்களில் பணி செய்யக்கூடிய மின்வாரிய பணியாளர்களை அழைத்து மின் கம்பங்களில் இருந்து அருந்து விழுந்த மின்கம்பிகளை உடனே சரி செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விபத்துகள் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுத்தார்.
என் நேரமும் தூங்காது தம் பகுதி வார்டு மக்களுக்காக அயராது உழைத்து கொண்டு சேவல் கூவும் முன்பே தன் பணியை தொடங்கிய 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் மின்வாரிய பணியாளர்களுக்கு 50 வது வார்டு பகுதி மக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி
சேவல் கூவும் முன்பே தன் பணியை தொடங்கிய கவுன்சிலர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்கிறார் - அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்!!
அடுத்த
தூத்துக்குடி தொழில் நிறுவனங்களுக்கு காவல்துறை கொடுத்து மெஸேஜ்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026