கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு ஊராட்சிகளில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல புதிய பணிகள் இன்று தொடங்கிவைக்கப்பட்டன. இதில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
சின்னமலைக்குன்று – திப்பனூத்து
ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி தொடங்கப்பட்டது. நிகழ்வில் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், ஸ்டீபன், கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், சின்னமாரிமுத்து, இம்மானுவேல், ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளத்துரை, கிளைச் செயலாளர்கள் வேலுச்சாமி, சுரேஷ்குமார், மாடசாமி, பேரூர் கழக துணைச் செயலாளர் மாரியப்பன், வார்டு செயலாளர் சின்னப்பர், அயலக அணி அமைப்பாளர் ராமமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி அர்ச்சனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சின்னமலைக்குன்று – நாவலக்கன்பட்டி
ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவுடைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி தொடங்கப்பட்டது. நிகழ்வில் முத்துக்குமார், ஸ்டீபன், நவநீதக்கண்ணன், சின்னமாரிமுத்து, இம்மானுவேல், வெள்ளத்துரை, கிளைச் செயலாளர்கள் கிருஷ்ணன், சுரேஷ்குமார், மாடசாமி, மாரியப்பன், சின்னப்பர், ராமமூர்த்தி, அர்ச்சனா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குமரெட்டியாபுரம்
ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியின் அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்வில் முத்துக்குமார், ஸ்டீபன், நவநீதக்கண்ணன், சின்னமாரிமுத்து, இம்மானுவேல், வெள்ளத்துரை, கிளைச் செயலாளர்கள் மதன்ராஜ், சுரேஷ்குமார், மாடசாமி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
மீனாட்சிபுரம்
ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்வில் முத்துக்குமார், ஸ்டீபன், நவநீதக்கண்ணன், பீக்கிலிபட்டி முருகேசன், சின்னமாரிமுத்து, இம்மானுவேல், வெள்ளத்துரை, ஜோதி செல்வராஜ், சுரேஷ்குமார், மாடசாமி, மாரியப்பன், சின்னப்பர், ராமமூர்த்தி, அர்ச்சனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் வசதி மேம்பாட்டிற்கு இந்த திட்டங்கள் பெரும் பலனளிக்கும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தூத்துக்குடி
ஜி.வி. மார்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டிய குடிநீர் திட்டங்கள் – கோவில்பட்டி பகுதிகளில் வளர்ச்சி வேகத்தில்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“பாரதியார் பதிய வைத்த தீபம்—சுதந்திரக் குரல் முழங்கிய தூத்துக்குடி பாஜக விழா”
அடுத்த
உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெற்ற கருத்தரங்கில் 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026