மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் சிறப்புப் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இலக்கிய மண்வாசனை வீசிய இந்த நிகழ்வில், பாரதியார் பாடிய சுதந்திர வேட்கை பாடல்கள், விழிப்புணர்வு கவிதைகள் என ஒன்றன்பின் ஒன்றாக பாடப்பரிமாறி, கலந்துகொண்டோர் உள்ளத்தில் தேசப் பற்று மீண்டும் துளிர்த்தது.

நிகழ்ச்சிக்கு தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையேற்றார். துணைத் தலைவி வில்லிசை ஜெயலலிதா, மாவட்டச் செயலாளர் காந்தாரி அம்மாள் உமா ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்தனர்.

கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ்கனி, மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வம், தெற்கு மண்டல தலைவர் மாதவன், சமூக ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் காளிராஜ், மருத்துவப் பிரிவு மாவட்ட தலைவர் ரவீந்திர பாலாஜி, கலை மற்றும் காலச்சாரப் பிரிவு மாவட்ட தலைவர் ஞானபிரகாசம், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயகுமார், ஆன்மீகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவி உஷா தேவி, மகளிரணி துணைத் தலைவி லதா, OBC அணி மாவட்டச் செயலாளர் சேர்மகுருமூர்த்தி, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் பிடிலிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் பாஜக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.