தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவில் அமைந்துள்ள  தருவைக்குளத்தின் சூசையப்பர் சபையின் சார்பாக தருவைக்குளம்   கண்மாயிக்கு , மழை காலத்தில் வரும் தண்ணீர் பாதையில் ஏற்பட்டிருந்த மண் அடைப்புகளையும் முட்செடிகளையும் ஒரு வார காலமாக தொடர்ந்து வேலை பார்த்து அகற்றி வருகிறார்கள்.

தாமாக முன்வந்து சமூக பணி செய்யும் சூசையப்பர் சபையினருக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என தங்களது சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.