தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன் முன்னிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் 53 வது வார்டு பகுதியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கழிவுநீர் அகற்றப்படவில்லை, தார் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதுகுறித்து மேயரிடம் மனு ஒன்றை அளித்தார்.
மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் அளித்த மனுவில் தெரிவித்ததாவது :-
தூத்துக்குடி மாநகராட்சி 53வது வார்டு முத்தையாபுரம் தெற்கு தெரு பகுதியில் சுமார் ஒன்றை ஆண்டு காலத்திற்கும் மேலாக கழிவு நீரை அகற்ற சிறிய கழிவுநீர் வாகனம் வராததாலும், அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை மாநகராட்சி நிர்வாகம் எடுக்க முன்வரவில்லை என்றும், இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள்.
கழிவு நீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்தப் பகுதியில் தார் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக கிடைப்பதால் புதிய தார் சாலை வசதிகள் அமைத்து தரவும், பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக செயல்படுத்த கோரியும் மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம் என்றும்.
கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் தவறும் பட்சத்தில் பொதுமக்களை திரட்டி ஆர்பாட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் இவ்வாறு புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் அளித்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தூத்துக்குடி
கழிவு நீரை அகற்ற எந்த நடவடிக்கையும் இல்லை..., மக்களை திரட்டி ஆர்பாட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முத்தையா புரம் பகுதி சுந்தர் நகர் தமிழ்நாடு அரசு கிளை பொது நூலகத்தை - மேயர் ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி அற்புதம் மருத்துவமனை சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026