தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் (NSS) சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர், மக்கள் மனதில் என்றும் வாழும் ‘இளையோரின் அறிவுத் தந்தை’ டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று (15.10.2025) காலை சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி நிர்வாக அதிகாரி வீரராஜன் மற்றும் முதல்வர் ஜோஸ் சாஜி குமார் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் Dr. இம்மானுவேல் ஜோசப் சிறப்புரை ஆற்றி, கலாம் அவர்களின் வாழ்க்கை இலக்குகள், கடின உழைப்பு, நாட்டுப்பற்றும், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் அவரின் எண்ணங்களையும் பற்றி ஊக்கமான உரையாற்றினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நல பணி திட்ட அலுவலர் பிரிண்ட்லி அ. கோப் மற்றும் கல்லூரி நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்.
மாணவர்கள் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து நினைவுகூர்ந்து, அவரின் கனவுகளை நினைவுபடுத்தும் விதமாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழா நிறைவில் அனைவரும் “கனவு காணுங்கள் – அதனை நனவாக்க பாடுபடுங்கள்” என்ற கலாம் அவர்களின் கருத்தை உறுதியாக எடுத்துரைத்து நிகழ்ச்சியை சிறப்பாக நிறைவு செய்தனர்.
தூத்துக்குடி
“அறிவின் ஒளியால் இளைஞர் மனங்களை பிரகாசப்படுத்திய நாள் – அப்துல் கலாம் பிறந்தநாள் விழா உற்சாகமாக நடைபெற்றது!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
54-ஆவது ஆண்டு விழா முன்னிட்டு – தூத்துக்குடியில் அ.தி.மு.க.வின் நலத்திட்டங்கள் தொடக்கம்!
அடுத்த
தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்க டிரஸ்ட் சட்டத்துக்கு முரணாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு – தலைவர் ராமசாமியிடம் விளக்கம் கேட்க தீர்மானம்!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026