அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் — புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்ட இந்த மகத்தான இயக்கம், வரும் 17.10.2025 வெள்ளிக்கிழமை அன்று 54-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி, ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடும் முதல் நிகழ்வாக கழக கண்மணிகளுக்கான (ஆண்கள்) நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடியில் இந்த நலத்திட்டங்களை கழக வர்த்தக அணி செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் வழங்கி விழாவைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் கழக நிர்வாகிகள், செயற்பாட்டாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு ஆண்டு விழா தொடக்கத்தைக் கொண்டாடினர்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக, இந்த விழா உற்சாகமான சூழலில் நடைபெற்றது.