தமிழ்நாடு முதலமைச்சரும் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, “என் வாக்குச்சாவடி.. வெற்றி வாக்குச்சாவடி..” என்ற வெற்றி முழக்கத்துடன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட கூட்டாம்புளி பாகம் எண்.227 மற்றும் 228 ஆகிய வாக்குச்சாவடிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா கலந்து கொண்டு, கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று திராவிட மாடல் அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரிக்க தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்கொடி, ஒன்றிய துணை செயலாளர் ஏஞ்சலின் ஜெனிட்டா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சண்முக நாராயணன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன், ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் மொபட் ராஜன், ஒன்றிய மாணவரணி சற்குணம், கிளை செயலாளர்கள், பாக நிலை முகவர்கள், பாக டிஜிட்டல் முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 4T ஹௌசிங் போர்டு வடக்கு குறுக்கு தெரு, KTC நகர் வட பகுதி மற்றும் KTC நகர் அழகர் கடை பகுதிகளில் சமீபத்திய மழையால் கழிவுநீர் செல்லும் பாதைகள் அடைந்து, தெருக்களில் கழிவுநீர் தேங்கி, குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் வருவதாக பொதுமக்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கழிவுநீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்திய அவர், வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் முனீர் அஹமத், பகுதி செயலாளர் சிவகுமார், துணை செயலாளர் வேல்முருகன், வட்ட செயலாளர் தெய்வேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.