தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO), தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட 110/22 கே.வி நகர் துணைமின் நிலையத்தில் நாளை (20.12.2025) நடைபெற இருந்த மின்பராமரிப்பு பணிகள் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனால், முன்பாக அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டு, வழக்கம்போல் மின் விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், இதுகுறித்து செயற்பொறியாளர், நகர் – தூத்துக்குடி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இதனை கவனத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.