சுயமரியாதை இயக்கத்தின் மூதாட்டி, சமூக சீர்திருத்தவாதி “வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன்” தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (17.9.2025 – புதன்கிழமை) காலை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன் அமைந்துள்ள பெரியார் திருவுருவச் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி. கீதா ஜீவன் (M.Com., B.Ed., M.L.A) தலைமையேற்று மாலை அணிவித்து சமூக நீதி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அவருடன் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், கழக முன்னோடிகள், மாநகர, பகுதி, வட்டக் கழக செயலாளர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.