தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் சாரண சாரணியர் இயக்கம் இணைந்து முத்துநகர் கடற்கரையில் மரம் நடும் பணி மற்றும் கூட்டு தூய்மைப்படுத்தும் பணிகளை சிறப்பாக நடத்தியது. இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின் ஆகியோர் பங்கேற்று உற்சாகம் அளித்தனர்.

மேலும், மாணவ மாணவியர்கள், தன்னார்வலர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து பங்கேற்று முத்துநகர் கடற்கரையை சுத்தமாகவும் பசுமையாகவும் மாற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.