நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மீனவர்களின் வாழ்வாதாரம், ஈழத் தமிழர்கள், அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை தீவிரமாக முன்வைத்தார்.

“மீனவர்களின் உயிரும், இலங்கை தமிழர்களின் வாழ்வும் சமமாக முக்கியம்” எனக் கூறிய அவர், நாகை மாவட்டத்தில் மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், குடிநீர் வசதி, மருத்துவர்கள், வேலைவாய்ப்புகள், சுற்றுலா வளர்ச்சி ஆகியவற்றை புறக்கணித்த திமுக அரசை கடுமையாக சாடினார்.

“2026 தேர்தலில் போட்டி இரண்டே — தவெக மற்றும் திமுக. குடும்ப ஆட்சி வெல்லுமா? இல்ல ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் விஜய் வெல்லுவான் பார்க்கலாம்” என்ற கூற்றால் கூட்டத்தில் உற்சாகம் பெருக்கெடுத்தது.

முடிவில், “உறுதியோடு இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என மக்களை உறுதியூட்டினார்.