தூத்துக்குடி அரசு மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் பாதாள சாக்கடைப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, சாக்கடைப் பணிகள் முடிந்ததால் கல்லூரி மற்றும் விடுதி பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் குண்டும் குழியும் இருப்பதாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை கவனத்தில் கொண்ட மேயர் ஜெகன், “சாலை பாதிப்பு விரைவில் சரிசெய்யப்பட்டு மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

இந்த ஆய்வில் கல்லூரி முதல்வர் மற்றும் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் சிவக்குமார், உறைவிட மருத்துவர் டாக்டர் சைலேஷ், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாநகர மன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாநகர மன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.