தூத்துக்குடி அரசு மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் பாதாள சாக்கடைப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, சாக்கடைப் பணிகள் முடிந்ததால் கல்லூரி மற்றும் விடுதி பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் குண்டும் குழியும் இருப்பதாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை கவனத்தில் கொண்ட மேயர் ஜெகன், “சாலை பாதிப்பு விரைவில் சரிசெய்யப்பட்டு மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.
இந்த ஆய்வில் கல்லூரி முதல்வர் மற்றும் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் சிவக்குமார், உறைவிட மருத்துவர் டாக்டர் சைலேஷ், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாநகர மன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாநகர மன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் சாக்கடைப் பணிகள் ஆய்வு – மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீடு தான் அதிமுகவின் தலைமை அலுவலகம்: உடன்குடியில் கனிமொழி எம்.பி ஆவேசம்!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் தொகுதியில் 44 பயனாளிகளுக்கு 36 லட்சம் கடன் உதவி வழங்கினார் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026