தூத்துக்குடி குறுக்குசாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையிலான கலை மற்றும் அறிவுத் திறன் போட்டிகள் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.

இந்த போட்டிகளில் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15 பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டித் தொடர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பேச்சுப் போட்டி, கோலப் போட்டி, வினாடி வினா, நெருப்பின்றி சமையல், நாட்டுப்புற நடனப்போட்டி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இடம்பெற்றன.

இதில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய புனிதவளனார் மேல்நிலைப்பள்ளி, கீழமுடிமண் பள்ளி, மொத்த மதிப்பெண்களில் முதலிடம் பெற்று சுழற்கோப்பையை வென்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் ஜீவன் ஜேக்கப் தலைமை வகித்து மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் அறக்கட்டளை உறுப்பினர்களான சுதன்கீலர், சுதாசுதன், மரு. மகிழ் ஜான், கீர்த்தனாமகிழ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியதோடு, பள்ளிகளுக்கிடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பையும் மேம்படுத்திய சிறப்பான நிகழ்ச்சியாக அமைந்தது.